Sunday, 26 February 2012

நூலகத்தில் அவள் - முன்பனி!

கனவே நீ ஏன் கண் முன் வந்தாய்?
கைக்கெட்டும் தூரத்தில் ஆசைகள் பல தந்தாய்.
கவி பாடும் என் உதடுகளின் ஓசையை நீ வென்றாய்.
அழகான பாடல்களுக்கு அர்த்தங்கள் பல தந்தாய்.
கொடி இடை கொண்டு அன்ன நடை பயின்றாய்.
அழகுக்கே இலக்கணமாய் அழகே உருவாகி நின்றாய்.
உன் அழகை பாட வார்த்தைகள் இன்றி தவிக்கின்றேன்.
உன் கருவிழிகளில் நான் கரைந்து போகின்றேன்.

நூலகத்தில் அவள் - கார்!

நிலவின் ஓளியில் ஒரு சித்திரம்.
நிலவே நிலவை மறைக்கும் விசித்திரம்.
வெளுத்தது வானம்.
எங்கே...? எங்கே...?
நட்சத்திரம்...?
கண்டதில்லை இப்படி ஒரு பேரழகை சரித்திரம்.
உலகே! உன் இருதயத்தை பார்த்துக்கொள்! பத்திரம்!
அவளை காணாமல் கண் தேடுதே.
இன்று என்னவள் இன்றி பொளர்னமியும் அமாவாசை ஆனதே!

நூலகத்தில் அவள் - இளவேனில்!

அவள் கொலுசின் ஓசை சாரல் மழை போல் ஜில் என்று வீச,
அவள் புன்முறுவல் வாடை காற்றாக பேச,
அவள் கருங்கூந்தல் அருவியாக பாய,
அவள் விழிகளில் நான் கட்டுண்டு போய்,
அவள் உதடுகள் முனங்கும் செவி அறியா பாடலில் என்னை மறக்கின்றேன்.